கேட்டால் கிடைக்கும் அல்லால்
கேளாதும் கிடைக்கு முண்மை
ஈட்டும் பொருள் தொட்டு
ஈயும்வகை பொருளும் கிட்டும்!
நாட்டத்தில் நம தெண்ண
நலத்துக்கு ஏற்ற வகை
கூட்டத்தில் இருந்தாலும்
கூப்பிட்டுத் தரும் மனத்தாள்!
அன்புக்குள் அகிலத்தை அடக்கி
அன்பு றையச் செய்யுமிவள்
என்புக்குள் ஓடு கின்ற
இரத்த சதை நாளம்!
துன்பமே அற்ற ஒருத்தூய்மை
துணை செய்ய வேண்டுமெனில்
அன்னை மாதாவின் அடிதொழு!
அனையூரான்
No Comment! Be the first one.