அசையுமோ அணுகூட அன்னையின் அருளின்றி
அவளிடம் கேட்டுப் பாரு
திசைபேதம் பாராது திக்கெட்டும் நிறைந்தவள்
திருவருள் உனக்கு சீரு!
இசைந்தவள் வருவதும் இரப்பவர்க் கருள்வதும்
இலக்கண மவளின் கூறு
இசைந்திடு மனங்களில் இருப்பது அவளுமே
ஏறெடுத் தவளைப் பாரு!
உலகவள் ஆலயம் உயிரவள் சக்தியே
உண்டெனில் ஒப்பு வோர்க்கு
நலந்தனே விளைந்திடும் நகன்றிடும் பிணிகளும்
நம்பியே வருகையும் தருவுமோர்க்கு!
வளமுடை வாழ்வதை வரமெனப் பெற்றிட
வருகிறார் கோடிக் கோடி
உளச்சுடர் ஒளிர்ந்திட ஒவ்வொரு நொடியதும்
உனதன்னை தருகிறாள் தேடி!
ஆனையூரான்
No Comment! Be the first one.