நீ நீயாக இரு
பிடித்தவர்கள் நேசிக்கட்டும்.
பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்.
உங்கள் மதிப்பை
முடிவு செய்ய வேண்டியது நீ தான்
உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல.
திமிரும் பிடிவாதமும்
நேர்மை என்ற நதியின்
இரு கரைகளே.
உன் உணர்வுகளை
மதிக்காத இடத்தில்
உரிமைக்கு மட்டும்
இடமளிக்காதே!
இவரைப்போல்
அவரைப்போல்
இல்லாமல்
உன்னைப்போல்
வாழ்ந்து காட்டு.
சந்தோஷமாக வாழ்வதை விட
சவால்கள் மேல் சவாரி செய்து
வாழ்வதே கெத்து.
தயக்கம் தடைகளை உருவாக்கும்.
இயக்கம் தடைகளை உடைக்கும்.
அவமானப் படும்போது
அவதாரம் எடு.
வீழ்கின்ற போது
விஸ்வரூபம் எடு
புண்படுகிற போது
புன்னகை செய்.
வாதாடுவதை விட்டு விட்டு
சோர்ந்து இருக்காதே!
தளர்ந்து நிற்க்காதே!
வளர்ச்சியில் வீழ்ச்சி
என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான்
No Comment! Be the first one.