புறத்தலையும் உள்ளத்தை பூட்டி வைத்தே
அறத்தணைய இன்பத்தை அடைவீராக
சிறுத்துகளாய் இதயமும் சுருங்குமாயின்
சிறப்பேது வாழ்வினிலே சிந்திப்பீரே!
துறந்தலையும் துறவுதனைத் துறந்து
புறத்தலையும் புவிவாழ்வு வேண்டாம்
இரந்தலையும் வாழ்வதுவும் வீணே
நிரந்தரமே இல்லாத வாழ்வில்!
பரந்துலகு படைத்த பின்னே
பரமபிதா நினைத்த தெலாம்
சிறந்த வகைமானிடம் திகழ
சீர்செய்த ஒழுங்கு முறை!
மண்டியிடு மன்னிக்கப் படுவாய்நீ
மாதாவை எண்ணிவிடு கண்ணீர்
கொண்டிருந்த பாவங்கள் கரையும்
கணங்கணமும் மகிழ்சியது நிறையும்!
No Comment! Be the first one.