எழுதனும் என்ற தோணல்
எதை நான் எழுதுவது
எழுதிட கருப்பொருள் ஒன்று
எதை நான் தேடுவது
அழுமொலி ஓசை கூடும்
அவலம் எழுதுவனோ
அழுவார் அடைந்த அவலம்
அதைத்தான் எழுதுவனோ!
நாளும் நடத்தும் கொலைகள்
நாடாளப் படுத்தும் வன்மம்
காலம் செய்யும் மாற்றம்
காதல் பெயரில் ஆட்டம்
ஆணவ அலைகளின் உச்சம்
அடிக்கடி நிகழும் விபத்து
நானெனும் அகந்தை கொண்டோர்
நடத்தும் தர்பார் வேள்வி!
சாதியின் பெயரால் சண்டை
சமத்துவ மற்றப் போக்கு
வாதிகள் போக்கில் மாற்றம்
வக்கற்றோர்க் கெதிராய் நிற்றல்
ஆதி காலத்தை மீண்டும்
அரியணை ஏற்றத் துடிப்பு
ஏதை எழுதுவேன் நானும்
எப்படி எழுதுவேன் தானும்!
No Comment! Be the first one.