இரவில் எழுத வரும்
எழுத்தொன்றி பேச வரும்
உறவாய் கற்பனை யென்
உள்ளத்தில் ஓடி வரும்!
வருங்கவிதை யாப்பு பெறும்
வரமதுவே காப்பு தரும்
திறமெனக்குள் மூப்பு பெறும்
தீந்தமிழு கோப்பு தரும்!
படிப்போர்க்கு சுவையுந் தரும்
பாடுவர்க்கு அவையுந் தரும்
நடிக்கவும் சொல்லித் தரும்
நம்புவர்க்கு தெம்பும் தரும்!
என்கவிதை எவருக்குமே பாடம்
யானுமூரில் சிறுபள்ளிக் கூடம்
முன்னவரின் வழியி லெந்தன் ஞானம்
முயற்சியிலே தோற்பதில்லை நானும்!
No Comment! Be the first one.